Home இலங்கை பங்களாதேஸ் 5லட்சம் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு உதவியாக வழங்கியுள்ளது

பங்களாதேஸ் 5லட்சம் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு உதவியாக வழங்கியுள்ளது

by admin


பங்களாதேஸ் அரசாங்கம் 5லட்சம் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு உதவியாக வழங்கியுள்ளது. மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் பங்காளதேஸ் அரசாங்கம் இந்த நிதி உதவியை வழங்கியுள்ளது.

பங்களாதேஸ் பிரதமர் சேக் ஹசீனா இந்த நிதி உதவி குறித்து அறிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற அனர்த்தம் காரணமாக உயிரிழந்தோருக்காக அண்மையில் பங்களாதேஸ் பிரதமர் இரங்கல் வெளியிட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இரங்கல் செய்தி ஒன்றையும் அனுப்பி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்டோருக்கான நிதி உதவி இலங்கைக்கான பங்களாதேஸ் உயர்ஸ்தானிகரினால் விரைவில் இலங்கை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட உள்ளது. இதற்கு மேலதிகமாக பங்களாதேஸ் மருந்துப் பொருள் நிறுவனங்களிடமிருந்தும் உதவிகள் பெற்றுக்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More