Home இலங்கை அதிபரின் தாக்குதலுக்குள்ளான உயர்தர மாணவன் வைத்தியசாலையில்

அதிபரின் தாக்குதலுக்குள்ளான உயர்தர மாணவன் வைத்தியசாலையில்

by admin


கிளிநொச்சி  நகரில் இயங்கி வருகின்ற பிரபல பாடசாலை ஒன்றின்  அதிபர்  ஒருவரின் தாக்குதலுக்குள்ளான பாடசாலை உயர்தர மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது

கடந்த ஏழாம்  திகதி  குற்றச்சாட்டு  ஒன்றின் பெயரில்  குறித்த மாணவனை  அலுவலகத்திற்கு அழைத்த அதிபா்  அடித்துள்ளமையினால் கை  எலும்பில்  ஏற்பட்ட  பாதிப்புக் காரணமாக  வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு  இன்றுவரை மாணவன் சிகிச்சை  பெற்று வருகின்றார்.

மாணவர்கள்  குற்றம் செய்தால்  தண்டித்தல்   உண்மையாகவே  வரவேற்கத் தக்க  விடயம் என்ற போதிலும்   மாணவன் வைத்தியசாலையில்  சிகிச்சை  பெறுமளவிற்கு  தாக்குவதென்பது  ஏற்றுக்கொள்ள  முடியாத விடயமாகும்  என  பெற்றோர்களும்  கல்வியியலாளர்களும்  விசனம் தெரிவிக்கின்றனர்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More