குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை கவிழ்க்கும் விரிவான ஓர் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது அண்மைக் காலமாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இல்லத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்வுகளில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் சட்டம் ஒழுங்கு அமுல்படுத்தப்படும் எனவும், ஒர் சில குழுக்கள் இன முரண்பாடுகளை ஏற்படுத்த எடுக்கும் முயற்சிகள் வெற்றியளிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முஸ்லிம் மக்கள் அமைதியாக இருக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Spread the love
Add Comment