Home இந்தியா கச்சத்தீவை மீளப்பெற்றுக்கொள்ளுமாறு தமிழக முதல்வர் இந்திய பிரதமரிடம் கோரிக்கை

கச்சத்தீவை மீளப்பெற்றுக்கொள்ளுமாறு தமிழக முதல்வர் இந்திய பிரதமரிடம் கோரிக்கை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீளப்பெற்றுக் கொள்ளுமாறு தமிழக முதல்வர் கே.பழனிச்சாமி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரியுள்ளார்.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 தமிழக மீனவர்களையும், கைப்பற்றப்பட்டுள்ள 137 படகுகளையும் விடுவித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் அவர்  கோரியுள்ளார்.

தமிழக மீனவர்கள் விடுதலை மற்றும் படகு விடுவிப்பு விவகாரத்தில் மத்திய அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியதன் காரணமாகவே தமிழக மீனவர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளார்

கச்சத்தீவை மீளப் பெற்றுக்கொள்வதன் மூலம் மட்டுமே தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் எனவும், அவர்கள் அமைதியான முறையில் மீன்பிடியில் ஈடுபட வழியமைக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More