Home இந்தியா கயானாவில் இருந்து ஏவப்பட்டது இஸ்ரோவின் ஜிசற்-17 செயற்கைகோள் – வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது:-

கயானாவில் இருந்து ஏவப்பட்டது இஸ்ரோவின் ஜிசற்-17 செயற்கைகோள் – வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது:-

by admin

தொலைத்தொடர்பு மேம்பாட்டுக்காக இஸ்ரோவின் ஜிசாட்-17 செயற்கைகோள், பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியன் ரொக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டு, வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

தொலைத்தொடர்பு, டிடிஹெச் (DTH) சேவை மேம்பாட்டுக்காக ஜிசற்-17 செயற்கைகோளை லத்தீன் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவிலிருந்து, ஏரியன்-5 ரொக்கெட் மூலம் இஸ்ரோ அனுப்பியது.

இன்று அதிகாலை 2.29 மணிக்கு இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. பின்னர் ஜிசற் -17 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

அதிக எடைகொண்ட இந்த ஜிசற் -17 செயற்கைக்கோள், அனுப்புவதற்கான மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்பு இன்னும் இஸ்ரோ ஏவுதளத்துக்குக் கொண்டுவரப்படவில்லை என்பதால், ஃப்ரெஞ்ச் கயானாவிலிருந்து ஜிசற்-17 செலுத்தப்பட்டது.

ஜிசற்-17 செயற்கைகோள் 3,477 கிலோ எடைகொண்டது. இதன் ஆயுட்காலம் 15 ஆண்டுகள். இது இந்தியாவின் 18வது தொலைத்தொடர்பு மேம்பாட்டு செயற்கைகோள் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More