Home இலங்கை புலிகளை இல்லாதொழித்தமையே நான் செய்த ஓரே ஊழல் மோசடி – கோதபாய ராஜபக்ஸ

புலிகளை இல்லாதொழித்தமையே நான் செய்த ஓரே ஊழல் மோசடி – கோதபாய ராஜபக்ஸ

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழித்தமையே தாம் செய்த ஒரேயொரு ஊழல் மோசடி செயல் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
புலிகளை இல்லாதொழித்தமைக்காக தம்மை சிறையில் அடைத்தால் அதனை விருப்பத்துடன் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்றைய தினம் சென்று வழிபாடுகளை மேற்கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஆட்சியில் இருந்த அனைத்து ஜனாதிபதிகளும் யுத்தம் செய்துள்ளதாகவும் கடந்த அரசாங்கம் மட்டும் யுத்தம் செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ள அவர் மஹிந்த ராஜபக்ஸக்கள் இந்த நாட்டில் களவாடவில்லை எனவும் நாட்டை பாதுகாத்தனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அர்ப்பணிப்புடன் செயற்பட்ட காரணத்தினால் யுத்தத்தை வென்றெடுக்க முடிந்தது என குறிப்பிட்டுள்ள கோதபாய ராஜபக்ஸ   ஒரு மாத காலத்திற்குள் தம்மை கைது செய்யப் போவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளதாகவும் தாம் அரசியலில் ஈடுபடப் போவதாகக் கருதி பலர் பீதியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More