Home இலங்கை விமர்சனங்களுக்கும் சவால்களுக்கும் அஞ்சப் போவதில்லை – ஜனாதிபதி

விமர்சனங்களுக்கும் சவால்களுக்கும் அஞ்சப் போவதில்லை – ஜனாதிபதி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

விமர்சனங்கள் மற்றும் சவால்களுக்கு தாம் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விமர்சனங்கள் குறித்து தாம் நன்கு அறிந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வெலிகந்த சிங்ஹப்புர பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது இதனைக் குறிப்பிட்டுள்ள அவர் முன்னாள் பிரமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க மற்றும் மஹாத்மா காந்தி அளவிற்கு தாம் அவமானம் படவில்லை என   குறிப்பிட்டுள்ளார்.

முதுகெலும்பு இல்லாதவன் உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்கள் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹாத்மா காந்தி போராட்டத்தில் ஈடுபட்ட போது  விமர்சனம் செய்யப்பட்ட போதிலும், தற்போது உலகம் முழுவதிலும் அவருக்கு மரியாதை செலுத்தப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More