Home இலங்கை மன்னிப்பு தேவையில்லை நீதி நிலைநாட்டப்பட வேண்டும் – கோதபாய

மன்னிப்பு தேவையில்லை நீதி நிலைநாட்டப்பட வேண்டும் – கோதபாய

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மன்னிப்பு தேவையில்லை எனவும் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமெனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ராஜபக்சக்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென சிலர் கூறி வருவதாகவும் அவ்வாறு மன்னிப்பு எதுவும் தமக்கு தேவையில்லை எனவும் தமக்கு தேவையானது நீதி மட்டுமேயாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் ஓர் நேர்மையான அரசாங்க அதிகாரி எனவும், ஊழல் மோசடிகளில் ஈடுபடவில்லை எனவும் குறிப்பிட்டுள்ள அவர் தேயிலை தோட்டங்கள், இறப்பர் தோட்டங்கள், தென்னந்தோட்டங்கள் தமக்கு கிடையாது எனவும் ஹோட்டல்கள் தமக்கு கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமக்கு ஏன் இவ்வாறு தொல்லை கொடுக்கின்றார்கள் என்பது புரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More