Home இந்தியா காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயணிகள் பேருந்து மீது தாக்குதல் அமர்நாத் யாத்ரீகர்கள் ஏழு பேர் பலி:-

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயணிகள் பேருந்து மீது தாக்குதல் அமர்நாத் யாத்ரீகர்கள் ஏழு பேர் பலி:-

by admin

இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயணிகள் பேருந்து மீது நேற்று திங்கள்கிழமை இரவு, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமர்நாத் யாத்ரீகர்கள் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மத்திய ரிசர்வ் காவல் படையின் ஜம்மு கட்டுப்பாட்டு அறையில் இருந்து கடைசியாக வந்த தகவலின்படி 7 அமர்நாத் யாத்ரீகர்கள் கொல்லப்பட்டதாகவும் சில காவலர்கள் உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தாகவும் இந்திய மத்திய உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் தத்வாலியா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளர்h.

இதேவேளை இந்த தாக்குதல் யாத்ரீகர்களைக் குறிவைத்து நடத்தப்படவில்லை என்றும் பாதுகாப்புப் படையினரை இலக்காக வைத்து நடத்தப்பட்டது எனவும் காவல்துறை ஐ.ஜி முனிர் கான் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More