Home இலங்கை சூசையின் படகு குறித்த தகவல்கள் பொய்யானவை

சூசையின் படகு குறித்த தகவல்கள் பொய்யானவை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் சூசை பயன்படுத்திய படகு ஒன்று முல்லைத்தீவு கடற் பரப்பில் சஞ்சரிப்பதாக வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யானது என கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த படகு கடந்த நாட்களில் முல்லைத்தீவு கடற்பரப்பில் சஞ்சரித்தது என சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. எனினும் இந்த குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என கடற்படையின் பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய படகுகள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எந்த காரணத்திற்காகவும் அவை கடலில் விடப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த படகுகள் அடங்கிய கொள்கலன் தரை வழியாக ஒர் இடத்திலிருந்து மற்றுமொரு இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More