Home இலங்கை கொழும்பில் 4000 தொழில்முறை யாசகர்கள்?

கொழும்பில் 4000 தொழில்முறை யாசகர்கள்?

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கொழும்பில் 4000 தொழில்முறை யாசகர்கள் யாசகம் செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மெய்யாகவே யாசகம் செய்வோரின் எண்ணிக்கை வெறும் 660 எனவும்,   நான்காயிரம் பேர் தொழில்முறை அடிப்படையில் யாசகம் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. தொழில்முறை யாசகர்களின் செயற்பாடுகளினால் உண்மையான யாசகர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத்  தெரிவிக்கப்படுகிறது.

திட்டமிட்ட அடிப்படையில் வர்த்தக நடவடிக்கையாக யாசகம் செய்யபபட்டு வருவதாக ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. யாசகர்கள் என்ற போர்வையில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரும் உள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More