Home இலங்கை கூழாமுறிப்பு காடெரிப்பு தொடர்பில் விசாரணை தேவை – ரவிகரன்:-

கூழாமுறிப்பு காடெரிப்பு தொடர்பில் விசாரணை தேவை – ரவிகரன்:-

by admin

குடி­யேற்­றத்­துக்­குத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த கூழா­மு­றிப்­புக் காட்­டின் ஒரு பகுதி தீயில் எரிந்து சாம்­ப­ரா­கிய சம்­ப­வம் தொடர்பில்  உட­ன­டி­யாக விசா­ரணை நடத்­தப்­ப­ட­ வேண்­டும். இந்­தத் தீ இயற்­கை­யாக  உரு­வா­ன­தா­கத் தெரி­ய­வில்லை. திட்­ட­மிட்ட ரீதி­யில் இதனை எரித்­த­தா­கவே வலு­வா­கச் சந்­தே­கிக்க வேண்­டி­யுள்­ளது. என வடமாகாண சபை­யின் முல்­லைத்­தீவு மாவட்ட ஆளும் கட்சி உறுப்­பி­னர் து.ரவி­க­ரன் தெரி­வித்­தார்.

இது தொடர்­பில் அவர் அனுப்பி வைத்­துள்ள செய்­திக் குறிப்­பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் கூழா­மு­றிப்­புப் பகு­தி­யில் காட­ழித்து குடி­யேற்­றம் செய்­வ­தற்கு முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வது யாவ­ரும் அறிந்­ததே. கடந்த 10ஆம் திகதி நடை­பெற்ற முல்­லைத்­தீவு மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தி­லும் இந்த விட­யம் தொடர்­பில் கடும் விவா­தம் நடை­பெற்­றது.

சட்­ட­வி­ரோத காட­ழிப்பு, குடி­யேற்­றத்தை எதிர்த்து இளை­ஞர்­க­ளால் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மாபெ­ரும் கவ­ன­வீர்ப்­புப் பேரணி நடத்­தப்­பட்­டி­ருந்­தது. இவ்­வா­றான நிலை­யில், கூழா­மு­றிப்­புக் காட்­டின் ஒரு பகுதி தீயில் எரிந்து சாம்­ப­ரா­கி­யுள்ள சம்­ப­வம் பல்­வேறு சந்­தே­கங்­க­ளைத் தோற்­று­வித்­துள்­ளது. இது இயற்­கை­யாக நடந்­த­தைப் போன்று தெரி­ய­வில்லை. திட்­ட­மிட்ட ரீதி­யில், காட்டை அழித்து வெட்­ட­வெ­ளி­யாக்­கும் முயற்­சி­யின் முன்­ந­கர்­வா­கவே நோக்­க­வேண்­டி­யுள்­ளது.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் காணி­யற்ற தமிழ் – முஸ்­லிம் மக்­க­ளுக்கு காணி வழங்­கப்­ப­டு­வதை யாரும் எதிர்க்­க­வில்லை. ஒரு சமூ­கத்­திற்கு மாத்­தி­ரம் காணி­கள் வழங்­கப்­பட்­டுக் குடி­யேற்­றம் நடை­பெ­று­வ­தைத்­தான் எதிர்­கின்­றோம். எமது மாவட்­டத்­தில் தமிழ் – முஸ்­லிம் மக்­கள் ஒற்­று­மை­யா­கத்­தான் வாழ்ந்து வரு­கின்­றார்­கள். வன்­னி­யைச் சேர்ந்த அமைச்­சர் ஒரு­வர், இரு இனங்­க­ளி­டை­யே­யும் விரி­சல் ஏற்­ப­டுத்தி, இன­வா­தத்­தைக் கிளறி விடும் வகை­யில் செயற்­பட்டு வரு­கின்­றார். முஸ்­லிம் மக்­களே அவ­ரால் பாதிக்­கப்­பட்­டும் இருக்­கின்­ற­னர்.

இந்­தப் பின்­ன­ணி­களை எல்­லாம் அடிப்­ப­டை­யாக வைத்து நோக்­கும் போது, இந்­தக் காடு தீயில் எரிந்து சாம்­ப­ரா­னதை வெறும் சாதா­ரண சம்­ப­வ­மா­கக் கடந்து செல்ல முடி­யாது. மாவட்ட நிர்­வா­கம், எவ­ருக்­கும் பக்­கம் சாரா­மல் உரிய விசா­ரணை நடத்­திக் குற்­ற­வா­ளி­கள் கண்­ட­றி­யப்­ப­டு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் எனக் கோரு­கின்­றேன் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More