Home இலங்கை அங்குனுகொலபெலஸ்ஸவில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் 17 பேர்

அங்குனுகொலபெலஸ்ஸவில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் 17 பேர்

by admin


குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

அங்குனுகொலபெலஸ்ஸவில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் 17 பேர் காயமடைந்துள்ளனர். இரண்டு குழுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் இவ்வாறு காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மோதல் சம்பவம் இடம்பெற்ற போது அங்கு மக்கள் கூடியதாகவும் அதன் பின்னர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் இரவு இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 14 பேர் எம்பிலிபிட்டி வைத்தியசாலையிலும், 3 பேர் தங்காலை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More