Home இந்தியா மகளின் திருமணத்திற்காக 6 மாதம் விடுப்பில் செல்ல பரோல் கேட்டு நளினி வழக்கு

மகளின் திருமணத்திற்காக 6 மாதம் விடுப்பில் செல்ல பரோல் கேட்டு நளினி வழக்கு

by admin


மகளின் திருமணத்திற்காக 6 மாதம் விடுப்பில் செல்ல பரோல் கேட்டு நாளை   சென்னை உயர்நீதிமன்றில்  நளினி தரப்பில் வழக்கு தொடரப்பட உள்ளதாக அவரது சட்டதரணி  புகழேந்தி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று   வேலூர் மத்திய பெண்கள் சிறையில் உள்ளார்.  :

26வயதான மகள்   லண்டனில் உள்ள நிலையில்  அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பரோல் கேட்டு நளினி, தமிழக அரசுக்கு மனு அனுப்பிய போதும்    பரோல் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில், மகளின் திருமணத்திற்காக 6 மாதம் விடுப்பில் செல்ல பரோல் கேட்டு நாளை   சென்னை  உயர்நீதிமன்றில்  நளினி தரப்பில் வழக்கு தொடரப்பட உள்ளது
வழக்கு விசாரணை வரும் புதன்கிழமை எடுத்துக் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More