Home இலங்கை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் குற்றவாளிகளை விடவும் மோசமாக செயற்படுகின்றனர் – TNA

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் குற்றவாளிகளை விடவும் மோசமாக செயற்படுகின்றனர் – TNA

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் குற்றவாளிகளை விடவும் மிக மோசமாக செயற்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் பதவிப் பிரமாணம் செய்யும் போது செய்த சத்தியத்தை மீறியே தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

மருத்துவ தேவை உடையவர்களை உதாசீனம் செய்வது குற்றச் செயலாகும் என சுட்டிக்காட்டியுள்ள அவர் சுயநல நோக்கின் அடிப்படையில்  அரசாங்க மருத்துவ அதிகாரிகள் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாட்டு மக்களை பணயமாக வைத்து தொழிற்சங்கப் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More