Home இலங்கை ஆசியாவின் நோபல் பரிசான மகசேசே விருதினை இலங்கைத் தமிழரான 82 வயதான கெத்சி சண்முகம் பெற்றுள்ளார்

ஆசியாவின் நோபல் பரிசான மகசேசே விருதினை இலங்கைத் தமிழரான 82 வயதான கெத்சி சண்முகம் பெற்றுள்ளார்

by admin

ஆசியாவின் நோபல் பரிசான மகசேசே விருது 82 வயது  இலங்கைத்  தமிழ் பெண்மணியான  கெத்சி சண்முகம் உள்ளிட்ட 6 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்சின்; புகழ்பெற்ற அதிபரான ரமோன் மகசேசே நினைவாக ஆண்டுதோறும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து செயல்படுவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இலங்கைத் தமிழ்ப் பெண்மணி கெத்சி சண்முகம் உள்ளிட்ட 6 பேருக்கு பகிர்ந்து  வழங்கப்பட்டுள்ளது.

கெத்சி சண்முகம் இலங்கையில் யுத்த காலத்தில் கணவரை இழந்த பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோருக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்கிய ஆசிரியர்  என்பது குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்ஸ், ஜப்பான், இந்தோனேசியா, சிங்கப்பூர் நாட்டவருக்கும் இந்த விருது பகிர்ந்து வழங்க்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More