Home இலங்கை சுவிஸ்குமார் தப்பிக்க உதவிய உப காவல்துறை பரிசோதகர் இடைநிறுத்தம்.

சுவிஸ்குமார் தப்பிக்க உதவிய உப காவல்துறை பரிசோதகர் இடைநிறுத்தம்.

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ். காவல் நிலையத்தில் முன்னர் கடமையாற்றி பின்னர் வல்வெட்டித்துறை காவல் நிலையத்திற்கு இடம்மாற்றப்பட்ட உப காவல்துறை பரிசோதகர் ஶ்ரீகஜன் காவல்துறை  சேவையில் இருந்த இடைநிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

யாழில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான சுவிஸ் குமார் தப்பி செல்ல உதவிய குற்றசாட்டு தொடர்பில் உப காவல்துறை  பரிசோதகர் காவல்துறை  சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டு உள்ளார். அந்த சம்பவம் தொடர்பில் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யபப்ட்டு சட்டத்திற்கு முன் நிறுத்தப்படுவார்கள். சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படும்.

உப காவல்துறை  பரிசோதகர் தற்போது தலைமறைவாகி உள்ளார் எனவும்  எந்நேரமும் அவர் கைது செய்யப்படலாம் எனவும் அவர்  தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More