Home இலங்கை இந்த ஆண்டின் இறுதியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் – மஹிந்த அமரவீர

இந்த ஆண்டின் இறுதியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் – மஹிந்த அமரவீர

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இந்த ஆண்டின் இறுதியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக மீன்பிடித்துறை வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கல்பிட்டி கிருமுன்தல் தீவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் இறுதிக்குள் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிணை முறி மோசடிகள் தொடர்பில் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என சிலர் கூறுகின்ற போதிலும் அதற்கான அவசியம் இருக்காது எனவும், நடக்க வேண்டியது உரிய நேரத்தில் நடக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More