Home இலங்கை கமநல உத்தியோகத்தரை தாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு எதிர்ப்பு

கமநல உத்தியோகத்தரை தாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு எதிர்ப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கடந்த 11ந் திகதி கிளிநொச்சி உருத்திரபுரம் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தரை  சிலர்  தாக்குவதற்கு Nமுற்கொண்ட முயற்சிக்குக் கண்டனம் தெரிவித்து இன்று 17.08.2017 கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்; நடைபெற்றுள்ளது.

கடந்த 11ந் திகதி உருத்திரபுரம் பகுதியில் ஏலத்தில் விடப்பட்ட குளத்தில் மீன்பிடிப்பதற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்ட இடத்திற்கு உருத்திரபுரம் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் சென்றபோது இடையூறு ஏற்படுத்திய சிலர் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தரை தாக்க முயற்சித்தமை, அவருடைய உந்துருளியை சேதப்படுத்தியமை, அரச ஊழியரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பாக காவல்துறையினரிடம்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இன்று முற்பகல் 9.00 மணிக்கு கிளிநொச்சி கமநல சேவை உதவி ஆணையாளர் அலுவலகம் முன்பாக மாவட்டத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் விவசாயிகளும் போராட்டம் நடாத்தியதுடன் சம்பவம் தொடர்பான மனுவொன்றினையும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளரிடம் கையளித்துள்ளனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More