Home உலகம் ஸ்பெயினின் பார்சிலோனாவில் தாக்குதல் நடத்திய தாக்குதலாளி கொல்லப்பட்டு உள்ளதாக அறிவிப்பு:-

ஸ்பெயினின் பார்சிலோனாவில் தாக்குதல் நடத்திய தாக்குதலாளி கொல்லப்பட்டு உள்ளதாக அறிவிப்பு:-

by admin

ஸ்பெயினின் பார்சிலோனாவின் மத்திய பகுதியில் வாகனொன்றை மக்கள் மீது மோதி தாக்குதல் நடத்திய தாக்குதலாளி கொல்லப்பட்டுள்ளதாக ஸ்பெயின் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாடகை கார் ஒன்றை வாங்கிய மொராக்கோ நாட்டைச் சேர்ந்த 20 வயதான ட்ரிஸ் ஒபகிர் என்பவரே தாக்குதலாளி எனத் தெரிவித்து அவரது புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தனர்.

இதனையடுத்து, காம்ப்ரில்ஸ் என்ற இடத்தில் தீவிரவாதிகள் தங்கியிருந்த பகுதியை முற்றுகையிட்டு அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், காம்ப்ரில்ஸில் நடைபெற்ற என்கவுண்டரில் ட்ரிஸ் ஒபகிர் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையனர் தெரிவித்துள்ளனர். மேலும், பார்சிலோனா தாக்குதலுடன் தொடர்புடைய நான்கு பேரின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.

பொதுமக்கள் மீது வாகனம் மோதியதில் 14 பேர் உயிரிழந்து 100 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More