Home இலங்கை சுவிஸ்குமார் தப்பிசென்ற வழக்கில் மாவையிடம் வாக்கு மூலம் பதிய உத்தரவு.

சுவிஸ்குமார் தப்பிசென்ற வழக்கில் மாவையிடம் வாக்கு மூலம் பதிய உத்தரவு.

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

புங்குடுதீவு மாணவி கொலைவழக்கின் பிரதான எதிரியான சுவிஸ்குமார் தப்பி சென்றமை தொடர்பிலான வழக்கில் மாவை சேனாதிராஜாவிடம் வாக்குமூலத்தினை பதிவு செய்ய ஊர்காவற்துறை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம் றியாழ் முன்னிலையில் இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது சுவிஸ் குமார் தப்பி செல்ல உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போதே தமிழரசு கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிடம் வாக்கு மூலத்தினை பதிவு செய்ய நீதவான் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து சந்தேக நபரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More