Home உலகம் பார்சிலோனா தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் மொரோக்கோவில் கைது

பார்சிலோனா தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் மொரோக்கோவில் கைது

by admin


ஸ்பெயினின் பார்சிலோனாவில் கடந்த வாரம் வாகனத்தாக்குதல்களை மேற்கொண்ட தாக்குதலுடன்  தொடர்புடையதாக தெரிவித்து மொராக்கோ நாட்டைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்திருந்ததுடன்  30க்கும்  மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்ற நிலையில்  5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.

மேலும் தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபரான மொராக்கோவை சேர்ந்த 22 வயது யூனுஸ் அபோயக்கப் என்பரும் நேற்று முன்தினம் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மொராக்கோவில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.எஸ் இயக்கத்தின் ஆதரவாளர்களாக அவர்கள் இருப்பதால், பார்சிலோனா தாக்குதலுடன் இவர்களுக்கு மறைமுக தொடர்பு இருக்கலாம் என்பதன் அடிப்படையில்   கைது செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More