Home இந்தியா இணைப்பு 3 – ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1எச் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் நடவடிக்கையில் தோல்வி

இணைப்பு 3 – ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1எச் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் நடவடிக்கையில் தோல்வி

by admin

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1எச் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் நடவடிக்கையில்  தோல்வி ஏற்பட்டுள்ளது.

பி.எஸ்.எல்.வி. சி-39 ரொக்கெட் மூலம் தரை, வான், கடல்சார் ஆராய்ச்சித் தகவல்களுக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1எச் செயற்கைக் கோளை சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தும் முயற்சியில் தோல்வி ஏற்பட்டது.

செயற்கைக்கோள் வெப்பத்தடுப்பு அமைப்பு சரியாகப் பிரியவில்லை என்பதால் தோல்வியில் முடிந்ததாக இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்தார். எனினும்  ரொக்கெட் சரியாகத் திட்டமிட்டபடி விண்ணில் செலுத்தப்பட்டது.

இணைப்பு 2   – பி.எஸ்.எல்.வி. சி-39  செயற்கைகோள்    இன்று மாலை  விண்ணில் ஏவப்படுகின்றது

Aug 31, 2017 @ 03:12
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி. சி-39 ரொக்கெட் மூலம் இன்று மாலை  விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சி-39 ரொக்கெட் 29 மணிநேர கவுண்ட்டவுனை முடித்துக்கொண்டு இன்று விண்ணில் பாயவுள்ளது.  ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை 6.59 மணிக்கு இன்று  விண்ணில் செலுத்ப்படவுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் தனியார் செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1எச் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி. சி-39 ரொக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளது:-

Aug 24, 2017 @ 03:32

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி. சி-39 ரொக்கெட் மூலம் 31ம் திகதி விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையிலான 7 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ) முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 7 செயற்கைகோள்களை திட்டமிட்டப்படி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதில் முதலில் செலுத்தப்பட்ட செயற்கைகோளின் ஆயுள் காலம் நிறைவடையவிருப்பதை தொடர்ந்து, புதிதாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது.

இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் 31ம்விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

320 தொன் எடையும் 44.4 மீட்டர் உயரமும் கொண்ட ரொக்கெட்டில் அனுப்பப்படும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் செயற்கைகோள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டரிலும், அதிகபட்சம் 20 ஆயிரத்து 657 கிலோ மீட்டரிலும் நிலை நிறுத்தப்படுகிறது.

இதன்மூலம் இயற்கை சீற்றம், பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும். செயற்கைக்கோளை ஏவுவதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியிருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More