Home இலங்கை கிளிநொச்சியில் பேரூந்துக்காக காத்து நின்றவர் மீது வாள்வெட்டு

கிளிநொச்சியில் பேரூந்துக்காக காத்து நின்றவர் மீது வாள்வெட்டு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி கோணாவில் காந்திகிராமம் பகுதியில் இன்று ஞாயிறு காலை 8.30 மணியளவில் பேரூந்துக்காக காத்து நின்ற ஒருவா் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் நின்றவர் மீது, உழவு இயந்திரத்தில் வருகைதந்த ஒருவர் வாளால் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளார்.

வாள்வெட்டுக்குள்ளானவர் 53 வயது மதிக்கத்தக்க காந்திகிராமம் பகுதியை சேர்ந்த கிருபாகரன் என்ற 4 பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது. படுகாயமடைந்த நபரை உடனடியாக எவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முன்வராத நிலையில் நீண்ட நேரத்திற்கு பின்னரே முச்சக்கர வண்டி ஒன்றில் ஏற்றப்பட்டு  கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் கிளிநொச்சி  காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More