Home இலங்கை ஜனாதிபதியின் பாரியாருக்கு எதிராக வழக்குத் தொடர முடியும் – மஹிந்த ராஜபக்ஸ

ஜனாதிபதியின் பாரியாருக்கு எதிராக வழக்குத் தொடர முடியும் – மஹிந்த ராஜபக்ஸ

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாரியாருக்கு எதிராக வழக்குத் தொடர முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னதாக ஜனாதிபதியின் பாரியார், ஜனாதிபதியுடன் இணைந்து சில ஆடைகளை விநியோகம் செய்துள்ளதாகவும்  இது தொடர்பில்  வழக்குத் தொடர முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் ஊடகவியலாளர்களிடம் பேசிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவிற்கு எதிராக விதிக்கப்பட்ட தண்டனை குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More