Home இந்தியா மெரீனா கடலில் குடும்பத்தினருடன் நீராடிய 3 மாணவர்கள் உயிரிழப்பு!

மெரீனா கடலில் குடும்பத்தினருடன் நீராடிய 3 மாணவர்கள் உயிரிழப்பு!

by admin

தமிழகத்தில், மெரினா கடலில் குடும்பத்தாருடன் நீராடிய இரண்டு பாடசாலை மாணவர்கள் மற்றும் ஒரு கல்லூரி மாணவர் அலையில் இழுத்து செல்லப்பட்டு கடலில் மூழ்கி   உயிரிழந்துள்ளனர்.  சென்னை எம்ஜிஆர் நகர், கோவிலம்பாக்கத்தை சேர்ந்த சுதாகர், முருகன் ஆகிய  நண்பர்கள்.  தத்தமது குடும்பத்தாருடன் மெரினா கடற்கரைக்கு சென்றுள்ள நிலையில் பெரிய அலை ஒன்றினால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

14வதான ஆகாஷ மற்றும்   12 வயதான   தனுஷ் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.   இருவரில் ஆகாஷ் என்பவரின் உடல் மட்டுமே கரை ஒதுங்கியுள்ள நிலையில்  தனுஷ் என்பவரின் உடல் கரை ஒதுங்கவில்லை என்று மெரீனா கடற்கரை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குருநானக் கல்லூரி பிசிஏ இரண்டாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவரான 18 வயதான  சக்திவேல் என்பவரும் பேரலையால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.   இவரது உடலும் இதுவரையில் மீட்கப்படவில்லை.  சுனாமிக்கு பின்னர்,  மெரீனா கடற்கரையின்  தன்மை மாறிவிட்டதாகவும். திடீர் திடீர் என வரும் பேரலைகள் குளிப்பவர்களை இழுத்துச் செல்வதாகவுமதெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More