Home இலங்கை உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஜனவரியில் நடைபெறும்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஜனவரியில் நடைபெறும்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் திகதி அல்லது அதற்கு முன்னதாக தேர்தல் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் நடைபெறவிருப்பதனால், தேர்தலை இந்த ஆண்டில் நடத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். டிசம்பர் மாதம் 30 அல்லது 31ம் திகதி தேர்தல் நடத்துவதும் சாத்தியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அரச நிறுவனங்கள் கணக்காய்வுகளை செய்யும் தினங்களில் தேர்தல் நடத்தப்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More