Home இந்தியா கொரிய ஓபன் பட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து சம்பியன்

கொரிய ஓபன் பட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து சம்பியன்

by admin

சியோல் நகரில் டைபெற்ற  கொரிய ஓபன் பட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து சம்பியன் பட்டம் பெற்றார். இப்பட்டத்தை வெல்லும் முதலாவது இந்திய வீராங்கனை என்ற சாதனையையும்  பி.வி.சிந்து   படைத்துள்ளார்.  பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-19, 16-21, 21-10 என்ற செட் கணக்கில் ஜப்பானின் மினட்சு மிதானியை தோற்கடித்து அரை இறுதியில் நுழைந்தார்.

இதனைத் தொடர்ந்து இறுதிப் போட்டியில் ஜப்பானின் ஓகுகாரா (Okuhara ) வை எதிர்கொண்ட  சிந்து 22-20,11-21,21-18 என்ற செட் கணக்கில்  வெற்றி பெற்று  கொரிய ஓபன் பட்மிண்டன் சம்பியன் கிண்ணத்தினை  வென்றுள்ளார்.  உலகக் கோப்பை போட்டியில் ஓகுகாராவிடம் சிந்து தோற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#கொரிய ஓபன்

பேட்மிண்டன் தொடரின் இறுதி போட்டிக்கு  பி.வி. சிந்து    முன்னேற்றம்

: Sep 16, 2017 @ 04:53

கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முன்னேறியுள்ளார். காலிறுதிப் போட்டியின் போது பி.வி. சிந்து    ஜப்பானைச் சேர்ந்த மினாட்சு மிடானியை  எதிர் கொண்டு   2-1 என வெற்றி பெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.

இந்தநிலையில்  அரையிறுதிப் போட்டியில்   சீனாவை சேர்ந்த பிங் ஜியாவை எதிர்கொண்ட பி.வி. சிந்து 2-1 என வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More