Home உலகம் ருமேனியாவில் கடுமையான புயல் – 8 பேர் உயிரிழப்பு :

ருமேனியாவில் கடுமையான புயல் – 8 பேர் உயிரிழப்பு :

by admin


ருமேனியாவின் திமிசோயரா நகரில்  நேற்றையதினம் வீசிய கடும் புயலில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 67 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் அங்கு மின்சாரம், நீர் விநியோகமும்   பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   அங்கு மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியதுடன் பலத்த  மழையும்   பெய்துள்ளது. இதனால்    ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன்  வீடுகளின் கூரைகளும்  காற்றில் பறந்துள்ளன.

.

தற்பொழுது மீட்புக்குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன் மக்களை  வீடுகளை விட்டு   வெளியேற வேண்டாம் எனவும்  மரங்கள் மற்றும் மின்சார கம்பங்கள் அருகே நிற்க வேண்டாம் எனவும் கோரப்பட்டுள்ளது. மேலும்  தற்போது புயல் ருமேனியாவில் இருந்து உக்ரைன் நோக்கி நகர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More