Home இலங்கை இரணைத்தீவில் மீள்குடியேறும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை – 150 நாளாக தொடரும் போராட்டம்

இரணைத்தீவில் மீள்குடியேறும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை – 150 நாளாக தொடரும் போராட்டம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள இரணைத்தீவில் தாங்கள் மீள்குடியேறும்  வரை தங்களின் கவனயீர்ப்பு போராட்டத்தை கைவிடப் போவதில்லை என இரணைத்தீவு மக்கள் தெரிவித்துள்ளனா்.

இன்று(27) 150 நாளாக  தங்களின் கவனயீர்ப்பு போராட்டத்தை  தொடரும் மக்கள்  இரணைத்தீவு மக்கள் தங்களின்  போராட்டத்திற்கு தீர்வு அறிவிக்கப்பட்டிருந்தாலும், தாங்கள் இரணைத்தீவில் மீள்குடியேறும் வரைக்கும்  கவனயீர்ப்பு போராட்டத்தை கைவிடப் போவதில்லை என  தெரிவித்துள்ளனா்.

இதேவேளை  வரும் ஒன்பதாம் திகதி நில அளவைதிணைக்கள உத்தியோகத்தர்கள் குழுவும் சில பொது மக்கள் பிரதிநிதிகளும், இரணைத்தீவு சென்று நில அளவை நடவடிக்கைகளில்  ஈடுப்படவுள்ளனர் எனவும் அவா்களின் பெயர் விபரங்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி  வைக்கப்பட்டுள்ளது என்றும் பூநகரி பிரதேச செயலாளா் கிருஸ்னேந்திரன்  குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More