Home இலங்கை அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் நாளை போராட்டம்

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் நாளை போராட்டம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாளையதினம் புதன்கிழமை யாழ்.பல்கலைகழகத்திற்கு முன்பாக மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ்.பல்கலைகழகம் முன்பாக காலை 10 மணிதொடக்கம் 11 மணி வரையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அரசியல் கைதிகளின் உறவினர்கள் , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் , பல்கலைகழக மாணவர் ஒன்றியம் , பல்கலைகழக கல்வி சார் மற்றும் சாரா ஊழியர் சங்கம் , மற்றும் பொது அமைப்புக்கள் ஆகியவற்றின் பங்களிப்புடன் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More