Home இலங்கை உரிய நியதிகளின் அடிப்படையில் அர்ஜூன் மகேந்திரன் மத்திய வங்கி ஆளுனராக நியமிக்கப்படவில்லை?

உரிய நியதிகளின் அடிப்படையில் அர்ஜூன் மகேந்திரன் மத்திய வங்கி ஆளுனராக நியமிக்கப்படவில்லை?

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

உரிய நியதிகளின் அடிப்படையில் அர்ஜூன் மகேந்திரன் மத்திய வங்கியின் ஆளுனராக நியமிக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி  ஆணைக்குழுவின் விசாரணைகளில் நேற்றைய தினம்  சாட்சிமளித்திருந்த  மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் ,  பிரதி சொலிசுட்டர் ஜெனரல் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார்.

இலங்கையின் அரசியல் சாசனத்தின் பிரகாரம் தாம் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவில்லை என அர்ஜூன் மகேந்திரன் ஒப்புக்கொண்டுள்ளார். மத்திய வங்கியின் ஆளுனர் போன்ற உயர் அரச பதவிகளை ஏற்றுக் கொள்ளும் நபர்கள், நாட்டுக்கும் அரசியல் அமைப்பிற்கும் விசுவாசமாக செயற்படுவதாக உறுதிமொழி வழங்கி சத்தியப் பிரமாணம் செய்து கொள்வது வழமையானதாகும்.

எனினும், அர்ஜூன் மகேந்திரன் இவ்வாறு எவ்வித சத்தியப் பிரமாணங்களையும் செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More