Home இந்தியா சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பரோல் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது

சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பரோல் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது

by admin


உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள கணவரை சந்திப்பதற்காக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பரோல் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வருகின்ற நிலையில் அவரது கணவர் நடராஜன் உடல்நிலைக் கவலைக்கிடமாக உள்ளதனால்  15 நாட்கள் பரோலில் செல்ல சசிகலா சார்பில் சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு தாக்கல் செய்தனர்.

சசிகலா பரோல் மனுவுடன் அவரது கணவர் நடராஜனின் மருத்துவ அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில்   மனு மீதான பரிசீலனை நடைபெற்று வருவதாக   கர்நாடக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில், சசிகலாவின் பரோல் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலாவின்  கணவர் நடராஜனின் முழு சிகிச்சை விபரங்கள் கிடைக்காததால் பரோல் மனு நிராகரிக்கப்பட்டதாக   தகவல்கள் தெரிவிக்கின்றன.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More