Home இலங்கை புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு.

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரிகளும், குற்றவாளிகளின் சட்டத்தரணிகளும் தனித்தனியாக யாழ். மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

ஏழு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக போகம்பரை சிறைச்சாலையின் அத்தியட்சகர் பதிவுத்தபாலில் மேன்முறையீட்டு மனுவை அனுப்பி வைத்துள்ளார்.

இதேவேளை, மாணவி  படுகொலை வழக்கின் பிரதான சூத்திரதாரியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட குற்றவாளி சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் மற்றும் அவரது சகோதரன் சசீந்தரன் சார்பில் சட்டத்தரணி மேல் முறையீடு செய்துள்ளார்.

யாழ். மேல்நீதிமன்றத்திற்கு கிடைத்துள்ள இந்த மேன்முறையீட்டு மனுக்கள் தொடர்பில் Trial at Bar    நீதிபதிகளுக்கு அறிவிக்கப்படவுள்ளது. இதன் பின்னர் உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமிற்கு குறித்த மேன்முறையீட்டு மனு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

குற்றவாளிகளுக்கு ரயல் அட் பார்  (Trial at Bar   ) தீர்ப்பாயத்தினூடாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் மேன்முறையீட்டு மனு உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கு ரயல் அட் பார்  தீர்ப்பாயம் முன்னிலையில் விசாரணைகள் நடைபெற்று 9 எதிரிகளில் 7 பேரை தீர்ப்பாயம் குற்றவாளிகளாக கண்டு  கடந்த மாதம் 27 ஆம் திகதி குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன் 30 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More