Home இலங்கை ​மனுஸ் தீவில் உயிரிழந்த யாழ் இளைஞரின் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்படுகின்றது!

​மனுஸ் தீவில் உயிரிழந்த யாழ் இளைஞரின் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்படுகின்றது!

by editortamil


மனுஸ் தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் உயிரிழந்துள்ள யாழ்பாணம், சாவகச்சேரி, அல்லாரை தெற்கு தம்பு தோட்டம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ரஜீவ் ராஜேந்திரனின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார். இது குறித்து   ஜனாதிபதியின் செயலாளருடனும் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருடனும் கலந்துரையாடியதன் பயனாக, இதன் பிரகாரம் மேற்படி இளைஞரின் சடலம் நாளைய தினம் (14) கொழும்பு, கட்டுநாயக்க விமான நிலையத்திற்குக் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2013ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தீவில் அடைக்கலம் புகுந்துள்ளதாகக் கூறப்படுகின்ற இவர், அவுஸ்திரேலிய அரசினால் மனுஸ் தீவு தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டு, அங்கு அவர் உயிரிழந்துள்ள நிலையில், அவரது சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அவுஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் 09 ஆயிரம் டொலரைச் செலுத்துமாறு கோரியிருந்ததாக மேற்படி இளைஞரின் குடும்பத்தினர் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More