Home இலங்கை வடக்கு கிழக்கில் 2 ஆயிரம் மில்லியன் ரூபா நிதியில் 50 ஆயிரம் வீட்டுத்திட்டங்கள் உட்பட வாழ்வாதார திட்டங்கள்…

வடக்கு கிழக்கில் 2 ஆயிரம் மில்லியன் ரூபா நிதியில் 50 ஆயிரம் வீட்டுத்திட்டங்கள் உட்பட வாழ்வாதார திட்டங்கள்…

by editortamil

வடக்கு கிழக்கில் 2 ஆயிரம் மில்லியன் ரூபா நிதியில் 50 ஆயிரம் வீட்டுத்திட்டங்கள் உட்பட வாழ்வாதார திட்டங்களை எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தவுள்ளதாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்தார்.

யாழ் சென்ற சிவஞானசோதி வடகிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாக நேற்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் 12 ஆயிரம் பேர் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் 700 ற்கும் அதிகமான குடும்பங்கள் நலன்புரி நிலையங்களிலும் உள்ளனர்.  அதனால், இந்த பிரதேசத்தினை உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்சினைக்குரிய இடமாக கருத்திற் கொண்டு, யாழ்.மாவட்டத்திற்கென 14 ஆயிரத்து 500 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த 50 ஆயிரம் வீடுகளில் அதிகமான வீடுகள் யாழ்.மாவட்டத்திற்கும், வடகிழக்கு மாகாணங்களில் உள்ள ஏனைய மாவட்டங்களிலும் உள்ளடக்கப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளர்h.

இவ்வீட்டுத்திட்டங்களை வழங்குகின்ற போது, புள்ளி அடிப்படையில் தான் வழங்கப்படும் எனத் தெரிவித்த அவர் தெரிவு செய்யப்படுபவர்கள், உண்மையான தேவையுடையவர்களாகவும், நியாயப்பாடு உடையவர்களாகவும் இருக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இடம்பெயர்ந்தோர்கள். மற்றும் இந்தியாவில் இருந்து வருகை தந்தவர்களும் உள்வாங்கப்பட்டு புள்ளிகளின் அடிப்படையில் வழங்கப்படும் எனவும் குறிப்பாக பெண் தலைமைத்துவ குடும்பங்கள், முன்னாள் போராளிகள் குடும்பங்களுக்கும் புள்ளிகளின் அடிப்படையிலும், முன்னுரிமையின் அடிப்படையிலும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More