Home இலங்கை மகிந்த ராஜபக்ச தான் எனது பரம எதிரி – சரத்பொன்சேகா

மகிந்த ராஜபக்ச தான் எனது பரம எதிரி – சரத்பொன்சேகா

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் தனது பரம எதிரி என முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகா  தெரிவித்துள்ளார். மகிந்ததான் தனது பரம எதிரி  எனவும் அவருடைய கடந்தகால தவறுகளை அம்பலப்படுத்துதற்காகவே தான் அரசியலுக்கு வந்து அமைச்சர் பதவியையும் பெற்றுக்கொண்டேன் எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னால் ஓரு அரசாங்கத்தை நிறுவ முடியாது என்பது  தனக்கு நன்கு தெரியும் எனவும் ஆனால் மகிந்த ராஜபக்ச செய்த குற்றங்களை உலகத்திற்கு கூறுவதற்கு தன்னுடைய கட்சி தனக்கு உதவியாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் சென்று  மகிந்த செய்த குற்றங்களை அம்பலப்படுத்துவதே தனது நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More