Home இந்தியா கொல்கத்தாவில் உள்ள எல்ஐசி கட்டிடத்தில் கடுமையான தீ விபத்து

கொல்கத்தாவில் உள்ள எல்ஐசி கட்டிடத்தில் கடுமையான தீ விபத்து

by admin


இந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள எல்ஐசி கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

19 மாடிகள் கொண்ட மிகப்பெரிய வணிக வளாகத்தின் 16-வது தளத்தில் இன்று காலை  ஏற்பட்ட தீ விரைவில் ஏனைய இடங்களுக்கும் பரவியதாகவும்   10 வண்டிகளில் வந்த தீயணைப்பு படையினர்  தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தீ   வேகமாக  பரவியதால் உள்ளே யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்  தீப்பிடித்த தளத்தில் ஸ்டேட் வங்கியின் முக்கிய பகுதி காணப்படுவதாகவும்   அங்கு  பல லட்சம் மதிப்பிலான  கணிணிகள் எரிந்திருக்கலாம் எனவும்  எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More