Home இந்தியா இந்தியாவின் மகாராஷ்டிராவில் ரைல்ஸ் ஏற்றிச் சென்ற பாரவூர்தி கவிழ்ந்தது – 10 தொழிலாளர்கள் பலி:-

இந்தியாவின் மகாராஷ்டிராவில் ரைல்ஸ் ஏற்றிச் சென்ற பாரவூர்தி கவிழ்ந்தது – 10 தொழிலாளர்கள் பலி:-

by editortamil


இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் ரைல்ஸ் ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

தீபாவளிக்கு பின்னர் போக்குவரத்து இன்னும் சீரடையாத காரணத்தினால் சங்லி மாவட்டத்தில் கூலித் தொழிலாளர்கள் சிலர் நேற்று இரவு, குறித்த பாரவூத்தியில் ஏறிச் சென்றுள்ள நிலையில் இன்று அதிகாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த பாரவூர்தியானது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் மேலும் சிலர் பாரவூர்தியின் அடியில் சிக்கிக்கொண்டுள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More