Home இலங்கை புங்குடுதீவு மாணவி வித்தியா வீட்டுக்கு சென்ற ஜனாதிபதி குடும்பத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு உதவுவதாக உறுதி

புங்குடுதீவு மாணவி வித்தியா வீட்டுக்கு சென்ற ஜனாதிபதி குடும்பத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு உதவுவதாக உறுதி

by admin


யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட  புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயார் ஜனாதிபதியை இன்றையதினம் சந்தித்துள்ளார்  வவுனியா சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  வித்தியாவின் குடும்பத்தின் சுகதுக்கங்களை கேட்டறிவதற்காக அவரது வீட்டுக்கு  சென்றுள்ளார்.

வவுனியா சைவப் பிரகாஷ மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற வவுனியா மாவட்ட ‘உத்தியோகபூர்வ பணி’ ஜனாதிபதி சேவை நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதி நிகழ்ச்சியின் முடிவில் வவுனியா பிரதேசத்தில் உள்ள  அவர்களது வீட்டுக்கு  சென்ற ஜனாதிபதி, வித்தியாவின் குடும்ப உறுப்பினர்களின் சுகதுக்கங்களை கேட்டறிந்தார்.

மாணவி வித்தியாவின் மூத்த சகோதரியின் உயர் கல்வி நடவடிக்கைக்காகவும் அவரது குடும்பத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்காகவும் முடிந்த உதவிகளை வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மாணவி வித்தியாவின் கொலைக்கு சட்ட ரீதியான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக ஜனாதிபதி வழங்கிய உதவி குறித்து அவரின் தாயார் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More