Home இலங்கை நாட்டை பிளவடையச் செய்யும் அரசியல் சாசனத்திற்கு அனுமதியில்லை – சபாநாயகர்

நாட்டை பிளவடையச் செய்யும் அரசியல் சாசனத்திற்கு அனுமதியில்லை – சபாநாயகர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நாட்டை பிளவடையச் செய்யும் அரசியல் சாசனத்திற்கு அனுமதியளிக்கப்படாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பல கருத்துக்களை முன்வைத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்கோ, பௌத்த மதத்திற்கோ அல்லது ஏனைய மதங்களுக்கோ பாதகத்தை ஏற்படுத்தக்கூடிய அரசியல் சாசனத்திற்கு அனுமதியளித்து கையொப்பமிடப் போவதில்லை என அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.  மிஹிரிகமவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் சாசனத்தின் இறுதி வரைபு சமர்ப்பிக்கப்படாத நிலையில் எவரும் அரசியல் சாசனம் தொடர்பில் பதற்றமடையத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More