Home இந்தியா தொலைதூர உணர் திறன் செயற்கைகோள் டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்படவுள்ளது

தொலைதூர உணர் திறன் செயற்கைகோள் டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்படவுள்ளது

by admin


தொலைதூர உணர் திறன் செயற்கைகோள் ‘கார்ட்டோ சாட்’ மற்றும் 30 நானோ செயற்கைகோள்கள் டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்படவுள்ளதாக  இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.   ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஓகஸ்ட் மாதம்   பி.எஸ்.எல்.வி. சி-39 ரொக்கெட் மூலம்  விண்ணில் செலுத்தப்பபட்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச்   செயற்கைகோளின் வெப்பத்தகடு சரியாக செயல்படாததால் அது தோல்வியில் முடிந்தது.

இந்தநிலையில் தற்போது மீண்டும் டிசம்பர் மாதம் செயற்கைகோளை விண்ணில் செலுத்தும் பணியில் இந்திய விண்வெளி ஆய்வு மையம்   தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

டிசம்பர் மாதம் முதல் தொடர்ச்சியாக செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்கான பணியில் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறதெனவும் குறிப்பாக டிசம்பர் 2-ம் வாரத்தில் வெளிநாடுகளை சேர்ந்த 30 நானோ செயற்கைகோள்களுடன், தொலைதூர உணர்திறன் செயற்கைகோளான இந்தியாவின் ‘கார்ட்டோ சாட்’ செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்பட உள்ளது எனவும் டாக்டர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.

‘கார்ட்டோசாட்’ செயற்கைகோள்   , வரைபடங்கள் தயாரிக்கவும், நகர்ப்புற, கிராமப்புற, கடலோர நில பயன்பாடு, வீதி அமைக்கும் பணி கண்காணிப்பு, நீர் விநியோகம், புவியியல் தகவல் அமைப்பு, ராணுவ பணிகள் ஆகிய பயன்பாடுகளுக்கு உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதோடு கட்டுமான பணியை மதிப்பீடு செய்யவும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட வேலைகளை கண்காணிக்கவும், நகர திட்டமிடல் மற்றும் மணல் குவாரி கண்காணிப்பு ஆகிய பணிகளுக்கும் உதவும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More