Home இலங்கை யாழில் வழிப்பறிக் கொள்ளையர்கள் மூவருக்கு 3 ஆண்டுகள் சிறை

யாழில் வழிப்பறிக் கொள்ளையர்கள் மூவருக்கு 3 ஆண்டுகள் சிறை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்ட மூவருக்கு மூன்று ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் தலா 3 ஆயிரத்து 500 ரூபா தண்டமும் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் தீர்ப்பளித்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவருக்கும், 24 வயதுடைய இரண்டு இளைஞர்களுக்குமே இந்த தண்டனை வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் கடந்த ஜூலை மாதம் 17ஆம் திகதி துவிச்சக்கர வண்டியில் சென்ற பெண்ணொருவரின் கூடையிலிருந்த 28 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையடித்தமை, அன்றைய தினம் நாயன்மார்கட்டு பகுதியில் வைத்து பெண்ணொருவரின் 2 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான தாலிக்கொடியை அறுத்த குற்றச்சாட்டுக்கள்  குறித்த மூவர் மீதும் காவல்துறையினரால்  முன்வைக்கப்பட்டது.

சம்பவதினம் முச்சக்கர வண்டியொன்றில் சென்ற இந்த மூன்று சந்தேகநபர்களும் அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்தனர் என விசாரணைகளில் நிரூபிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே யாழ்ப்பாணம் நீதிவான் மன்றால் நேற்றுத் திங்கட்கிழமை தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிகளால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் தாலிக்கொடியும் அவர்களிடமிருந்து காவல்துறையினரால் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More