Home இந்தியா உ.பி அனல் மின் நிலைய பொய்லர் வெடிப்புச் சம்பவம் தொடர்பில் தேசிய மனித உரிமை ஆணையம் விளக்கம் கோரியுள்ளது

உ.பி அனல் மின் நிலைய பொய்லர் வெடிப்புச் சம்பவம் தொடர்பில் தேசிய மனித உரிமை ஆணையம் விளக்கம் கோரியுள்ளது

by admin

உத்தரபிரதேசத்தின்   ரே பரேலி மாவட்டத்தில் ஏற்பட்ட அனல் மின் நிலைய பொய்லர் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக 6 வாரங்களுக்குள் உரிய விளக்கம் அளிக்குமாறு உத்தரப் பிரதேச அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம்  கடிதம் அனுப்பியுள்ளது.

அரசுக்கு சொந்தமாக 500 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலையத்தில்  நேற்றையதினம் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 26 பேர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 100 பேர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து  தேசிய மனித உரிமை ஆணையம் இன்று விசாரணை நடத்திய நிலையிலேயே    6 வாரங்களுக்குள் உரிய விளக்கம் அளிக்குமாறு உத்தரப் பிரதேச மாநில தலைமைச் செயலருக்கு கடிதம்  அனுப்பி உத்தரவு பிறப்பித்தது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More