Home இந்தியா கங்கை நதியில் புனித நீராடும்போது கூட்டநெரிசலில் சிக்கி மூன்று பேர் பலி…

கங்கை நதியில் புனித நீராடும்போது கூட்டநெரிசலில் சிக்கி மூன்று பேர் பலி…

by editortamil

இந்தியாவின் பீகார் மாநிலத்தின் பெகுசாராய் மாவட்டத்தில் உள்ள கங்கை நதியில் புனித நீராடும்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் வடமாநிலங்களில் இன்று கார்த்திகை பவுர்ணமி தினம் இந்து , சீக்கிய மற்றும் ஜெயின் மதத்தினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த விழாவையொட்டி கங்கை நதியில் புனித நீராடுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் இறங்கியபோது அதிக கூட்டத்தின் காரணமாக நெரிசல் ஏற்பட்டது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்ச ரூபாய் நிதியுதவியை வழங்குவதாக  அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More