Home இலங்கை இரணைமடுகுளத்தில் மேலதிகமாக இரண்டு அடி நீரை சேமிக்க தயார்

இரணைமடுகுளத்தில் மேலதிகமாக இரண்டு அடி நீரை சேமிக்க தயார்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்டு வரும் கிளிநொச்சி இரணைமடுகுளம் இவ்வருடம் முதல் மேலதிகமாக இரண்டு  அடி நீரை  சேமிப்பதற்கு தயாராகவுள்ளதாக கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.  இரணைமடு அபிவிருத்தி பணியின் 80 வீதமான பணிகள் நிறைவுற்ற நிலையில் இரண்டு வருடங்களின் பின் இவ்வருடம் வழமையைவிட  இரண்டு அடி நீர் மேலதிகமாக சேமிக்க கூடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரணைமடுகுளம் வழமையாக 34 அடி நீர் சேமிக்கப்படும். ஆனால் இவ்வருடம் போதிய மழைவீழ்ச்சி கிடைக்கும்  போது 36 அடி வரை நீரை சேமிக்க முடியும் என நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிளிநொச்சியில்  கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக  மாவட்டத்தின் பல குளங்களினதும் நீர் மட்டம் உயரவடைய தொடங்கியுள்ளது.

அந்த  வகையில் இரணைமடுகுளம் 13.11 அடியாகவும், அக்கராயன்குளம் 08.05 அடியாகவும், கரியாலைநாகபடுவான்குளம் 00.07அடியாகவும், கல்மடுகுளம் 10.01 அடியாகவும், கனகாம்பிகைகுளம் 10.06 அடியாகவும், வன்னேரிக்குளம் 03.11 அடியாகவும், புதுமுறிப்புக்குளம் 09.01அடியாகவும், பிரமந்தனாறுகுளம் 05.09 அடியாகவும், குடமுருட்டிகுளம் 04.01 அடியாகவும் காணப்படுகிறது.

தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் நாளுக்கு நாள் குளங்களின் நீர் மட்டம் உயர்வடைந்து வரும் எனவும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More