Home இந்தியா டிசம்பர் 18ம் திகதிக்குள்; முன்னிலையாகாவிட்டால் விஜய் மல்லையா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார்

டிசம்பர் 18ம் திகதிக்குள்; முன்னிலையாகாவிட்டால் விஜய் மல்லையா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார்

by admin


எதிர்வரும் டிசம்பர் 18ம் திகதிக்குள்; முன்னிலையாகாவிட்டால்  பிரபல தொழிலதிபர்  விஜய் மல்லையா  தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என  டெல்லி  நீதிமன்றம் அறிவித்துள்ளது.  விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு திருப்பிக் கொடுக்காமல் லண்டனுக்கு தப்பிச் சென்றுள்ளார்.

இது தொடர்பாக உச்சநீதிமன்றில்; வங்கிகள் சார்பில் வழக்கு தொடர்ந்துள்ளதுடன் அவரை லண்டனிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிகளில் இந்திய மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அத்துடன் அமுலாக்கத் துறையினர் பல தடவை வலியுறுத்தியும்   வழக்கு விசாரணைக்கு மல்லையா முன்னிலையாகாத நிலையில்  டெல்லி நீதிமனற்ம்  சம்மன் அனுப்பியும் அவர் பதிலளிக்கவில்லை.

இந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றில்  இன்று இது தொடர்பாக அமுலாக்கத்துறை சார்பில்   மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என  அமுலாக்கத்துறை  புதிய மனு தாக்கல்  செய்துள்ளது.

இந்த மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்ற நிலையிலேயே மல்லையா டிசம்பர் 18ம் திகதிக்குள் முன்னிலையாகவிட்டால்  அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார்  என நீதிமன்றம் தெரிவித்துள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More