Home இந்தியா மதுரையில் இரு தனியார் பாடசாலைகளுக்கு வெடிகுண்டு எச்சரிக்கை:

மதுரையில் இரு தனியார் பாடசாலைகளுக்கு வெடிகுண்டு எச்சரிக்கை:

by admin

தமிழகத்தின் மதுரை நகரில் இரண்டு தனியார் பாடசாலைகளுக்கு இனந்தெரியாத நபர்களினால் வெடிகுண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டமையினால் அப் பகுதியில் இயல்புநிலை பாதிக்கப்பட்டிருந்தது. மதுரை மாவட்டத்தின் சிம்மக்கல் பகுதியில் இயங்கி வரும் சாரதா வித்யாலயம் மற்றும் சுப்ரமணியபுரம் பகுதியில் இயங்கி வரும் கே.வி.டி. பாடசாலை முதலிய இரண்டு பாடசாலைகளுக்கே தொலைபேசி மூலம் இன்று காலை வெடிகுண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

பாடசாலையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டு, இனந்தெரியாத நபர்கள் தொலைபேசியை துண்டித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இரண்டு பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து மதுரைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெடிகுண்டு குறித்த எச்சரிக்கை பொய்யானது என ஆரம்ப விசாரணைகளில் இருந்து  அறியப்பட்டுள்ளது. இவ்வாறு எச்சரிக்கை விடுத்த இனந்தெரியாத நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் மதுரை காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More