Home இலங்கை தொண்டமான் பெயர் நீக்கம் குறித்து அரசாங்கத்திடம் இந்தியா கேள்வி எழுப்ப உள்ளது

தொண்டமான் பெயர் நீக்கம் குறித்து அரசாங்கத்திடம் இந்தியா கேள்வி எழுப்ப உள்ளது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மறைந்த அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயர் தொழிற் பயிற்சி கல்லூரி ஒன்றிலிருந்து நீக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா கேள்வி எழுப்ப உள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இலங்கை மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்த ஒர் தலைவர் எனவும் அவரது பெயர், தொழிற் பயிற்சி கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தி.மு.க துணைத்தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்திய மத்திய அரசாங்கத்திடம் அவர் விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த போது சுஸ்மா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வம்சாவளித் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருவதாகக் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்படும் என சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More