Home இலங்கை காலியின் சில பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் நீக்கம் – 19 பேர் கைது

காலியின் சில பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் நீக்கம் – 19 பேர் கைது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

காலி ஜிந்தோட்ட   பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. காலியில் நேற்றிரவு இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடாபில் 19 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். காலியின் சில பகுதிகளுக்கு நேற்றைய தினம் இரவு காவல்துறை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெலிபிட்டி மோதர, மஹாபுகல, ரக்வத்த, கிங்தொட்ட, பியதிகம மற்றும் குறுந்துவத்த ஆகிய கிராம சேவைப் பிரிவுகளில் இவ்வாறு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பதற்ற நிலையை கட்டுப்படுத்தும் நோக்கில் பெரும் எண்ணிக்கையிலான காவல்துறையினர் குறித்த பகுதிகளில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More